Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா - கங்கை அமரன் சந்திப்பு : இசை ரசிகர்கள் மகிழ்ச்சி

17 பிப், 2022 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Ilaiyaraja---Gangaiamaram-met-:-Fans-happy

தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன், தம்பி கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த கூட்டணி இளையராஜா - கங்கை அமரன் கூட்டணி. அண்ணன் இசையில் தம்பி எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். தம்பி இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தின் பாடல்கள், படத்தின் வெற்றி தமிழ்த் திரையுலக சாதனை மறக்க முடியாத ஒன்று.

அண்ணன், தம்பி இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை, அதனால் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இருவருமே அதைப் பற்றிப் பேசியதில்லை.

கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இருவரது வாரிசுகளுக்குள்ளும் எந்த மோதலும் இல்லாமல் பாசம் அதிகமாகவே இருக்கிறது.


இந்நிலையில் நேற்று கங்கை அமரன் அவரது சமூகவலைதளத்தில் “இன்று நடந்த சந்திப்பு.. இறை அருளுக்கு நன்றி.. உறவுகள் தொடர்கதை..!!!” என்று இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் இளையராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

இருவரது சந்திப்பும் அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணன், தம்பி இருவரும் மீண்டும் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களைத் தர வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஒரு ரசிகர் அவரது கமெண்ட்டில் ரஜினிகாந்த் நடிக்க, இளையராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய 'ஆணென்ன பெண் என்ன….' பாடலில் உள்ள “சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா சொத்து சுகம் தேவையில்லே,

பந்தம் விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே,

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'காட்பாதர்' படப்பிடிப்பை முடிக்கப் போகும் நயன்தாரா'காட்பாதர்' படப்பிடிப்பை ... 'வலிமை' ஜுரம் ஆரம்பம்… 'வலிமை' ஜுரம் ஆரம்பம்…

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in