தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம்.
இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து, “அவள் உங்களிடம் வந்து பூக்களைக் கொடுக்கும் போது, முதல் முறை போலவே தோன்றும்…இது நிஜமாகவே மகிழ்ச்சியான காதலர் தினம் தான்” என்று பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதன் உடன் காத்துவாக்குல ஒரு காதல் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்து தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.




