விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம்.
இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து, “அவள் உங்களிடம் வந்து பூக்களைக் கொடுக்கும் போது, முதல் முறை போலவே தோன்றும்…இது நிஜமாகவே மகிழ்ச்சியான காதலர் தினம் தான்” என்று பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதன் உடன் காத்துவாக்குல ஒரு காதல் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்து தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.