அரசியல் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு கொடுத்த நடிகர் விஷால் | விஜய்க்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்த்த சில சினிமா பிரபலங்கள் | ஆர்பி சவுத்ரி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்? | கைவிட்ட 'கர', காப்பாற்றுமா 'கருப்பு' | கேங்ஸ்டராக நாகார்ஜூனா... முதல்வராக தபு... | தமிழ் சினிமாவிற்கு வரும் ‛ஜெர்ஸி' பட இயக்குனர் | ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்” | ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன் | விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' கதை இதுதான்: இயக்குனர் தகவல் |

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக விடமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எல்லோருக்கும் என்னோட வயது என்பதால் அவர்கள் என்னிடம் உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பற்றி அவ்வளவு சின்னத்தனமாக புத்தி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
நித்யா ரவீந்திரன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 45 ஆண்டுகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறியப்படுகிறார். மேலும், தமிழ் எஃப் எம் ஒன்றுக்கு இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.