இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தவர்களில் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் முக்கியமானவர். அதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி 9ல் தனது நீண்டநாள் காதலரான ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான்.
இந்நிலையில் தங்களது ஹனிமூன் மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் முகாமிட்டுள்ள ரெபா மோனிகா ஜான் தனது கணவருடன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "மாலத்தீவு ஒரு சொர்க்கம்.. போதும் என்று செல்வதற்கு யாருக்குமே மனம் வராது.. குறிப்பாக எங்களுக்கு வராது" என்று கூறியுள்ளார் ரெபா மோனிகா ஜான்.