தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தவர்களில் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் முக்கியமானவர். அதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி 9ல் தனது நீண்டநாள் காதலரான ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான்.
இந்நிலையில் தங்களது ஹனிமூன் மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் முகாமிட்டுள்ள ரெபா மோனிகா ஜான் தனது கணவருடன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "மாலத்தீவு ஒரு சொர்க்கம்.. போதும் என்று செல்வதற்கு யாருக்குமே மனம் வராது.. குறிப்பாக எங்களுக்கு வராது" என்று கூறியுள்ளார் ரெபா மோனிகா ஜான்.