டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் மற்றும் காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை, ஆலிஸ் என அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்யை வைத்து சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்திலும் ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா போன்ற நடிகைகள் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் தற்போது இன்னொரு முக்கிய வேடத்திற்கு ரைசா வில்சன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு பாடகி வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடிக்காத வேடம். அதோடு மிகவும் கலகலப்பான வேடம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.




