ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடிகராகவும் உருவெடுத்தார். அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் ஆர்யா நடிப்பில் சந்தனத்தேவன் என்ற ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து நாற்காலி என்ற படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அந்த செய்தியும் அடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப்படம் மேலும் அழகாகும் என்று தெரிவித்திருக்கும் அமீர், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடவில்லை.