‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடிகராகவும் உருவெடுத்தார். அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் ஆர்யா நடிப்பில் சந்தனத்தேவன் என்ற ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து நாற்காலி என்ற படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அந்த செய்தியும் அடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப்படம் மேலும் அழகாகும் என்று தெரிவித்திருக்கும் அமீர், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடவில்லை.




