பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி | பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை | ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா |
'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமான ஜனனி அய்யரை அடையாளம் காட்டியது பாலா இயக்கிய 'அவன் இவன்'. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பின்பு மலையாளத்துக்கு சென்றார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர் அதே கண்கள், பலூன் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விதி மதி உல்டா படத்தில் நடித்தார் . இந்த படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
ஜனனி நடித்துள்ள கசட தபற, தொல்லைக்காட்சி, வேஷம், பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் சில படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. சில பாதியில் நிற்கிறது. இந்த நிலையில கூர்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறர்.
பிரையன் பி ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில் ராஜாஜி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்க, சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு த்ரில்லர் வகை படமாகும்.