பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் நாவல் உலகில் பல காலமாக விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல்தான் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் உள்ளிட்ட சிலர் இந்த நாவலைப் படமாக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள். ஆனால், மணிரத்னம் படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடக் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வழங்குவதே இல்லை. படத்தின் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு அப்டேட் மட்டும்தான் வந்திருக்கும். இந்நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் 'பொன்னியின் செல்வன்' அப்டேட்டை ஐஸ்வர்யா ரசிகர்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் நந்தினி, மந்தாகினி என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். கோடை விடுமுறை வெளியீடு என்றால் இந்நேரம் படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்தால் அது போய்க் கொண்டேயிருக்கும். அவ்வளவு கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. ரசிகர்களின் அப்டேட் வேண்டுகோள் படக்குழுவினருக்கு எட்டுமா ?.