பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
நாடு முழுவதிலும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர். என்.ரவி முதன் முறையாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஆனால் அப்போது வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்திருக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛வடக்கத்தி காரர்கள் புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ் தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்'' என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.