ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்கள் விஜய், அஜித் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள். இருவரது ரசிகர்களுக்குள்ளும்தான் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடக்கும்.
இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி 8 வருடங்களாகிவிட்டது. 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றன. அதற்குப் பிறகு இருவரது படங்களும் மோதிக் கொள்ளவில்லை.
அஜித் நடித்த 'வலிமை' படம் கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா அலை காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாத வெளியீடு என திட்டமிடப்பட்டுத்தான் வேலைகள் நடந்து வந்தது. 'வலிமை' படத்தின் அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த கொரோனா அலைக்குத் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவில்தான் வருகிறார்கள். மக்களை மீண்டும் வரவழைக்க 'வலிமை, பீஸ்ட்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும், அல்லது ஒரே நாளில் வெளியாக வேண்டும் என திரையுலகில் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வருட அலையின் போது 'மாஸ்டர்' படம் வெளிவந்துதான் திரையுலகத்தை மீட்டுக் கொடுத்தது. இந்த வருட அலைக்குப் பிறகு 'வலிமை, பீஸ்ட்' வந்துதான் திரையுலகை மீட்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்பது சரியானதுதான். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களும் ஒரே நாளில் படத்தை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அடுத்தடுத்து வந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.