பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. நாளை முதலே இது அமலுக்கு வருகிறது.
இதன் காரணமாக பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில தெலுங்குப் படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏற்கெனவே டிக்கெட் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் கடும் சிக்கலில் உள்ளார்கள். இந்நிலையில் 50 சதவீத இருக்கை என்பது அவர்களது வருவாயை மேலும் குறைத்துவிடும்.
தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் தெலங்கானாவில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களில் காட்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கும் விரைவில் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களாவது இந்த நிலை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.