மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து | சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் படங்கள் மோதல் | என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா கஷ்டபடுவாங்க : ஷாலின் சோயா | அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை முறியடித்த 'துரந்தர் 2' | 'டகாய்ட்' படத்தில் ஜோனிடா காந்தி நடனம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | எங்களை நாங்களே கலாய்ச்சிப்போம் : 'எல்ஐகே' குழு | கல்லூரி விழாக்களில் நடிகைகளின் 'கிளாமர் நடனம்' : சமூக வலைத்தளங்களில் கண்டனம் | திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் |

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பார்ட்டி போய்விட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக, படுகாயம் அடைந்த இவர் கடந்த நான்கு மாதங்களாக எழுந்த நடக்க முடியாத அளவுக்கு சிகிச்சை பெற்றார். தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டும் படங்களில் நடிப்பதோடு முன்புபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோஷூட்டில் பிஸியாக உள்ளார் யாஷிகா.
இந்நிலையில் யாஷிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‛ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் போது, பல இயக்குனர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். சிலர் கவர்ச்சியாக நடித்துக் காட்டும்படி வற்புறுத்துவர் ஆனால் நான் அதை ஒப்புக் கொள்ளாமல் விலகிவிடுவேன்' எனக் கூறியுள்ளார்.