‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ஆடுஜீவிதம். புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் நாவலை அதே தலைப்பில் படமாக்குகிறார்கள். அமலாபால், லட்சுமி சர்மா, லீனா, அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதைக்களம் அரேபிய பாலைவனத்தில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீர் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ஜீரியாவில் மாட்டிக் கொண்டனர். பின்னர் இந்திய அரசின் உதவியுடன் தனி விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பை மீண்டும் அல்ஜீரியா மற்றும் ஜோர்டானில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து 4வது கட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஜோர்டானுக்கு செல்கிறார்கள். பிருத்விராஜ் மார்ச் முதல் வாரம் செல்வார் என்று தெரிகிறது.