'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பசங்க 2 படத்திற்கு பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.. ஏற்கனவே வாடா தம்பி என்கிற பாடல் வெளியான நிலையில் தற்போது உள்ளம் உருகுதய்யா என்கிற இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலில் முருகன் வேடம் அணிந்து நடித்துள்ளார் சூர்யா.
இந்த வேடத்தில் நடிக்கும்போது ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தாராம் சூர்யா. நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தேன் டைரக்டரே என்று பாண்டிராஜிடம் சொல்வது போல கூறியுள்ளார் சூர்யா. அவரது தந்தை சிவகுமார் சில புராண படங்களில் முருகன் வேடத்தில் நடித்து பெயர் பெற்றவர் என்பதால் அவருடன் சூர்யாவின் முருகன் கெட்டப்பை ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.