ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து கடந்த இரண்டு மாதங்களாக இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் என்கிற பெயரில் உருமாறிய கொரோனா மூன்றாவது அலையாக மாறி ஆரம்பகட்டத்தில் உள்ளது. சமீபத்தில் லண்டன் படப்பிடிபுகாக சென்ற இடத்தில் வடிவேலு, இயக்குனர் சுராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மோகன்லாலை வைத்து பெருச்சாழி, அர்ஜுன் நடித்த நிபுணன், பிரசன்னா - சினேகாவின் காதல் திருமணத்திற்கு வழிவகுத்த அச்சமுண்டு அச்சமுண்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரானால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சற்றே நகைச்சுவையுடன், “எனது வீட்டுக்கு ஒமைக்ரான் என்கிற விருந்தாளி வந்துள்ளார். இப்போதைக்கு அவர் என்னை பெரிதாக துன்புறுத்தவில்லை.. அதனால் நண்பர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசி மற்றும் கயாவில் கும்பமேளாவில் கலந்துகொண்டு காட்சிகளை படமாக்கினோம். 28 நாட்கள் கிட்டத்தட்ட 150 பேர் என்னுடன் செட்டில் பணியாற்றினார்கள்.. ஆனால் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா என்பது லாஜிக்கே இல்லாத மசாலா படம் போன்றது” என கூறியுள்ளார் அருண் வைத்தியநாதன்.
இவர் தற்போது வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு ஆகியோரை வைத்து ஷாட் பூட் 3 என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தபடம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது.