‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். சட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. சஜீவ் மீரா சாகிப் ராவுத்தர் என்பவர் தனது ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார் . இந்தப் படம் தொடங்கப்பட்டபோது இன்பினிடி பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இணை தயாரிப்பாளராக பைனான்ஸ் உதவி செய்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை ஓரங்கட்டிவிட்டு தனது நிறுவனத்தின் பெயர் மற்றும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார் சஜீவ் மீரா சாகிப் ராவுத்தர்.
அதையடுத்து இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஆலப்புழாவில் உள்ள நீதி மன்றத்தில் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இன்பினிடி பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் சுதாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் நேற்று டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருந்த படம் வெளிவரவில்லை.