மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிய நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல சினிமா நடன இயக்குனர் ராதிகாவைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
தொடர்நது 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாளில் ஒருவர், இரண்டாவது நாளில் இருவர், பத்தாவது நாளில் 10 பேர் என நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் எண்ணிக்கையும் இருந்தது. 365 நாட்கள் தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா நடத்தப்பட்டது. இதில் 600 நடன கலைஞர்கள் பங்பேற்றார்கள்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராதிகா மற்றும் அவரது குழுவினருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி இதனை வழங்கினார்.