அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிய நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல சினிமா நடன இயக்குனர் ராதிகாவைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
தொடர்நது 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாளில் ஒருவர், இரண்டாவது நாளில் இருவர், பத்தாவது நாளில் 10 பேர் என நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் எண்ணிக்கையும் இருந்தது. 365 நாட்கள் தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா நடத்தப்பட்டது. இதில் 600 நடன கலைஞர்கள் பங்பேற்றார்கள்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராதிகா மற்றும் அவரது குழுவினருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி இதனை வழங்கினார்.




