நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிய நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல சினிமா நடன இயக்குனர் ராதிகாவைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
தொடர்நது 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாளில் ஒருவர், இரண்டாவது நாளில் இருவர், பத்தாவது நாளில் 10 பேர் என நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் எண்ணிக்கையும் இருந்தது. 365 நாட்கள் தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா நடத்தப்பட்டது. இதில் 600 நடன கலைஞர்கள் பங்பேற்றார்கள்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராதிகா மற்றும் அவரது குழுவினருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி இதனை வழங்கினார்.