பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

இந்தியில் வெளியாகி பெரும் பெற்றி பெற்ற ஆர்ட்டிக்கல் 15 படம் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. போலீஸ் பயிற்சிக்காக சென்ற ஒரு இளம் அதிகாரி சென்ற இடத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிற கதை அம்சம் கொண்ட படம்.
இதில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்புகள் தாமதமானது. தற்போது உதயநிதி மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பாகும்.