டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியில் வெளியாகி பெரும் பெற்றி பெற்ற ஆர்ட்டிக்கல் 15 படம் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. போலீஸ் பயிற்சிக்காக சென்ற ஒரு இளம் அதிகாரி சென்ற இடத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிற கதை அம்சம் கொண்ட படம்.
இதில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்புகள் தாமதமானது. தற்போது உதயநிதி மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பாகும்.