20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இந்தியில் வெளியாகி பெரும் பெற்றி பெற்ற ஆர்ட்டிக்கல் 15 படம் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. போலீஸ் பயிற்சிக்காக சென்ற ஒரு இளம் அதிகாரி சென்ற இடத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிற கதை அம்சம் கொண்ட படம்.
இதில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்புகள் தாமதமானது. தற்போது உதயநிதி மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பாகும்.