ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 33 வருடங்களில் வெளியாகியுள்ளன. ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப்பின் இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இதன் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் மது தான் இந்த 5ம் பாகத்தையும் இயக்குகிறார்.. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
பொதுவாகவே தொடர் பாகங்களாக எடுக்கப்படும் படங்களில் அதில் நடித்த முக்கிய நடிகர்கள் தொடர்ந்து இடம் பெறுவது உண்டு, அப்படி இந்த நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் நடிகர்கள் முகேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். முகேஷ் இந்த ஐந்தாம் பாகத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில் ஜெகதிஸ்ரீகுமார் இதில் நடிப்பாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
காரணம் கடந்த 2012ல் கார் விபத்தில் சிக்கிய ஜெகதிஸ்ரீகுமார் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி குணமடைந்தாலும் அதன்பின் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.. இந்தநிலையில் இந்த ஐந்தாம் பாகத்தில் அவரும் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, அவரது வசதிக்காக பல காட்சிகளை அவரது வீட்டிலேயே படமாக்க முடிவு செய்துள்ளார்களாம்.