'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் அர்ஜூன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் அர்ஜூன்(57). ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சான்சிபார் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்து திரும்பிய அர்ஜூனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில், ‛‛கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.