தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரைத் துறையில் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பயணித்து வந்த நடிகை நயன்தாரா, தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட துவங்கி உள்ளார். இதற்காக அவர், 'தி லிப் பாம்' நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இது குறித்து, நயன்தாரா தரப்பு அறிக்கை: தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, அழகு சாதன பொருட்கள் உலகில், புதிய பிராண்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, புதிய அத்தியாயத்தை நயன்தாரா துவக்கி உள்ளார். தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களின், சிறப்பான செயல்திறன், உயர்பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், இந்நிறுவனத்துடன் அவர் கைகோர்த்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், கீர்த்தி சுரேஷ் இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும்; சமந்தா, காஜல் உள்ளிட்டோர் ஓட்டல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார்.