பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் |
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன்பிறகு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். என்றாலும் பெரிதாக அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் போனார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.
இந்த நிலையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் தமிழ் படமான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:
மம்முட்டி சார் நான் நடித்த ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார். அதில் எனது நடிப்பு பிடித்துவிடவே என்னை அவரது சொந்த படம் ஒன்றில் நடிக்க வைக்க விரும்பினார். அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதனால் அதை மனதில் வைத்து இந்த படத்தில் நான் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். அதன்பிறகு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும், அவரது குழுவினரும் ஜோக்கர் படத்தை பார்த்து விட்டு என்னை தேர்வு செய்தனர்.
முதல் மலையாள படம், குழுவினரும் அறிமுகமில்லாதவர்கள். முதல் இரு நாட்கள் தயக்கத்துடன் இருந்தேன். மம்முட்டி சார்தான் என்னிடம் தமிழில் சரளமாக பேசி எனது தயக்கத்தை போக்கினார். அவர் மிகவும் எளிமையான, இனிமையான, பணிவான மனிதர். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு ரம்யா பாண்டியன் கூறியிருக்கிறார்.