ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியான த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தையும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் எடுத்து, அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம்-3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. பின்னர் ஒருகட்டத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது நிலைமை வேறு. இரண்டாம் பாகத்தின் வெற்றியால், இதன் மூன்றாம் பாகத்தை எப்போது துவங்க போகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.
சொல்லப்போனால் மூன்றாம் பாகத்திற்கான க்ளைமாக்ஸ் கூட நான் யோசித்து வைத்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொல்ல அவருக்கும் அது பிடித்துப்போய் விட்டது. ஆனால் க்ளைமாக்ஸ் வரை சரியான பாதையில் கதையை நகர்த்திக் கொண்டு வர காட்சிகள் வேண்டும் இல்லையா..? அதில் தான் சவால் இருக்கிறது. தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் இருக்கிறேன்..
அதேசமயம் மனதிற்கு திருப்தியான ஸ்கிரிப்ட் தயாரானால் தான் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மூன்றாம் பாகத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். பேசாமல் அந்த திட்டத்தை அப்படியே போட்டுவிடுவேன்.. அதனால் இப்போதைக்கு சொல்வதென்றால் த்ரிஷ்யம் 3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது” என கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.