'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தநிலையில் ‛சித்திரை செவ்வானம்' என்கிற படம் மூலம் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல்
ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண்ட் சில்வா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஆகியோருடன் ரீமா கல்லிங்கலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி கூறும்போது, “இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு குத்துகளை விட்டு, பதிலுக்கு நாலு உதைகளை வாங்க வேண்டி இருக்குமோ என நினைத்தேன்.. ஆனால் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதை உருவாக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.