காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில், தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . கீர்த்தியின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார்
படத்தின் துவக்க விழா பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்ட படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. தந்தை தானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதுவும் அப்படி சாதரணமாக கிடைத்து விடாது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது” என கூறியுள்ளார்.