மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில், தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . கீர்த்தியின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார்
படத்தின் துவக்க விழா பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்ட படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. தந்தை தானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதுவும் அப்படி சாதரணமாக கிடைத்து விடாது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது” என கூறியுள்ளார்.




