கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'மாநாடு' படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்ஜே சூர்யா. இக்கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த்சாமி தான் நடிப்பதாக இருந்தது. படம் கொஞ்சம் தாமதமானதால் அவருக்குப் பதிலாக எஸ்ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதி டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். அந்த டுவீட்டை அப்போதே குறிப்பிட்டு எஸ்ஜே சூர்யா, “நன்றி தயாரிப்பாளர் சார், இயக்குனர் வெங்கட்பிரபு சார். என்ன ஒரு கதை, என்ன ஒரு விவரிப்பு. அற்புதமான விவரிப்பால் மிரண்டு விட்டேன். இந்த புராஜக்ட் கண்டிப்பாக எல்லைகளைக் கடக்கும். எனது நண்பன் சிம்புடன் இணைவது பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் தான் பதிவிட்ட அந்த டுவீட்டை தற்போது மீண்டும் குறிப்பிட்டு “பிப்ரவரி 4, 2020ம் தேதியன்று இயக்குனர் வெங்கட் பிரபு 'மாநாடு' படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். அவருடைய அற்புதமான விவரிப்பைப் பார்த்து அவரைக் கட்டித் தழுவி அன்றைய தினமே அந்த டுவீட்டைப் பதிவிட்டேன். இன்று இந்த உலகமே மாநாடு படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த லின்க்கை மீண்டும் ஷேர் செய்வதில் மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தில் சிம்புவின் நடிப்பைவிட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.