ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்தவர்களில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடி குறிப்பிட வேண்டியவர் சிலம்பரசன். ஆனால் அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் சினிமாவில் நல்ல வளர்ச்சியை எட்டவில்லை என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது திரையுலகப் பயணத்தை அவரே சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டார் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.
2010ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்குப் பிறகு அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை சிம்பு தரவில்லை என்பதுதான் உண்மை. அந்தக் குறையை நேற்று வெளியான 'மாநாடு' படம் போக்கியிருக்கிறது. அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது என தியேட்டர்காரர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.
2010க்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவந்த “வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்” ஆகிய படங்கள் மிகச் சுமார் வெற்றி, தோல்வி, படுதோல்வி வகைப்படங்கள் தான்.
2018ல் வந்த 'செக்கச் சிவந்த வானம்' படத்தை சிம்பு படம் என்று சொல்ல முடியாது. அதை மணிரத்னம் படம் என்றுதான் சொல்ல முடியும். விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோரும் அப்படத்தின் நாயகர்கள்.
'மாநாடு' படம் பற்றி ஆரம்பத்திலேயே சிம்பு யூகித்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்களில் காட்டாத ஈடுபாட்டை இந்த 'மாநாடு' படத்தில் அவர் காட்டியிருப்பது காட்சிக்குக் காட்சி தெரியும். இந்த வெற்றியை அப்படியே பிடித்துக் கொண்டே மேலேறிப் போவதுதான் அவருக்கு சிறப்பு.