பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஷ்ரேயா கோஷல். 2015ல் ஷைலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு அம்மாவானார். நேற்று தனது மகன் தேவ்யான் பிறந்து ஆறு மாதங்கள் ஆனதை அடுத்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மகன் சொல்வது போல ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான், எனக்கு இன்றுடன் ஆறு மாதம் ஆகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்கனைக் கேட்பது, பல படங்களுடன் இருக்கும் புத்தகங்களைப் படிப்பது, சுமாரான ஜோக்குகளுக்கெல்லாம் சத்தமாக சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்து என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசீர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷ்ரேயாவிற்கும் அவரது மகனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.