மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நடிகர் விக்ரம் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவை திடீரென அவரது வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பி.சுசீலாவின் தீவிர ரசிகரான விக்ரம் அவரை நேரில் சந்திக்க விரும்பி உள்ளார். இதற்காக தனது மானேஜர் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு பி.சுசீலா அனுமதி அளித்தவுடன் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.
அவருடன் பத்து நிமிடம் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தவர் சுமார் 2 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சுசீலாவும், விக்ரமும் இணைந்து சில பாடல்களை பாடி உள்ளனர். அடிக்கடி வந்து உங்களை சந்தித்து பேச அனுமதி தர வேண்டும் என்றும் அவர் சுசீலாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்று அவரும் தெரிவித்திருக்கிறார். அதோடு ‛‛என் வாழ்க்கைக் கனவு நனவானது என்றும், அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி'' என்றும் விக்ரம் கூறிவிட்டுச் சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சந்திப்பு குறித்து தற்போது பாடகி சுசீலா தரப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




