'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில தமிழ் தொலைக்காட்சி உலகில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பிரபலமானார். தற்போது விஜய் டிவியின் முக்கிய தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்கள் பலரது மனங்களை கொள்ளை கொண்ட வைஷ்ணவிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை சீரியல்களில் தன் நடிப்பினால் அசத்தி வந்த அவர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த செய்தியை அண்மையில் பகிர்ந்த வைஷ்ணவிக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.