பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.. தியேட்டர்களில் தான் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது மலையாள தியேட்டர் உரிமையாளர்கள் இடத்தில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் வலது கரமாக இருப்பவர் என்பதால் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் அவரது இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது பற்றி இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளதாவது : இந்தப்படத்தை உருவாக்குவது என்பது நானும் மோகன்லாலும் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கண்டுவந்த கனவு.. மிகப்பெரிய செலவில் இந்த படம் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையில் சம்பாதித்த மொத்தத்தையும் இந்தப்படத்தில் எங்களை நம்பி போட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. அதனாலேயே நானும் மோகன்லாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளோம். மிக அதிக சம்பளம் வாங்கக்கூடிய கலை இயக்குனர் சாபு சிரில். கூட, இந்தப்படத்தில் தனது வேலை காலம்காலமாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, வெறும் 25 லட்சம் மட்டுமே பெற்றுக்கொண்டு வேலை பார்த்துள்ளார்.
தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்கும்போதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம்.. ஆனால் நாட்கள் நீண்டுகொண்டே போனதாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மிகப்பெரிய தொகையை வட்டியாகவே கட்டியதாலும், வேறு வழியின்றி தான் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. எங்கள் இருவரில் யாரோ ஒருவர் பிடிவாதம் காட்டியிருந்தாலும் ஆண்டனி இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட முடிவு செய்திருப்பார்.
ஆனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவரது நஷ்டத்தின் மீது எங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இருவருமே விரும்பவில்லை. மற்ற யாரையும் விட இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் எங்கள் மூவருக்கும் தான் வருத்தமும் வேதனையும் அதிகம்” என கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.