Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 வருட கனவுக்காக சம்பளம் வாங்காமல் வேலை செய்தோம் : பிரியதர்ஷன்

08 நவ, 2021 - 19:50 IST
எழுத்தின் அளவு:
25-years-dream-says-Priyadarsan

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.. தியேட்டர்களில் தான் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது மலையாள தியேட்டர் உரிமையாளர்கள் இடத்தில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் வலது கரமாக இருப்பவர் என்பதால் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் அவரது இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது பற்றி இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளதாவது : இந்தப்படத்தை உருவாக்குவது என்பது நானும் மோகன்லாலும் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கண்டுவந்த கனவு.. மிகப்பெரிய செலவில் இந்த படம் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையில் சம்பாதித்த மொத்தத்தையும் இந்தப்படத்தில் எங்களை நம்பி போட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. அதனாலேயே நானும் மோகன்லாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளோம். மிக அதிக சம்பளம் வாங்கக்கூடிய கலை இயக்குனர் சாபு சிரில். கூட, இந்தப்படத்தில் தனது வேலை காலம்காலமாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, வெறும் 25 லட்சம் மட்டுமே பெற்றுக்கொண்டு வேலை பார்த்துள்ளார்.

தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்கும்போதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம்.. ஆனால் நாட்கள் நீண்டுகொண்டே போனதாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மிகப்பெரிய தொகையை வட்டியாகவே கட்டியதாலும், வேறு வழியின்றி தான் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. எங்கள் இருவரில் யாரோ ஒருவர் பிடிவாதம் காட்டியிருந்தாலும் ஆண்டனி இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட முடிவு செய்திருப்பார்.

ஆனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவரது நஷ்டத்தின் மீது எங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இருவருமே விரும்பவில்லை. மற்ற யாரையும் விட இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் எங்கள் மூவருக்கும் தான் வருத்தமும் வேதனையும் அதிகம்” என கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம்மம்முட்டியின் நண்பகல் நேரத்து ... விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in