பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா | கோயம்புத்தூரில் உருவான கேசினோ | கடைசி விவசாயி படைத்த புதிய சாதனை | நட்சத்திரம் நகர்கிறது : காதல் அரசியலை பேசும் படம் |
தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, அட்ரஸ், நவரச, பட்டத்து அரசன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் என்ற படத்தில் நடித்த அதர்வா தற்போது இரண்டாவது முறையாக பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் உட்பட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததின் காரணமாக செட்டுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது படத்திற்கு தற்காலிகமாக பட்டத்து அரசன் என்று பெயர் வைத்திருந்த போதும் இது மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.