நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, அட்ரஸ், நவரச, பட்டத்து அரசன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் என்ற படத்தில் நடித்த அதர்வா தற்போது இரண்டாவது முறையாக பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் உட்பட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததின் காரணமாக செட்டுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது படத்திற்கு தற்காலிகமாக பட்டத்து அரசன் என்று பெயர் வைத்திருந்த போதும் இது மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.