Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய்பீம் படக்காட்சி - விளக்கமளித்த பிரகாஷ்ராஜ்!

07 நவ, 2021 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Prakash-raj-explains-about-jaibhim-controversy

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்திருக்கும் சூர்யா, இருளர் இன மக்களுக்காக வாதாடும் ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐ.ஜி பெருமாள் சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். இவர் திருட்டுப்போன நகைகளை பற்றி விசாரிக்கும்போது அடகு கடை வைத்திருப்பவரிடம் விசாரிப்பார். அப்போது தமிழ் தெரிந்த அவர் ஹிந்தியில் பேசுவார். அதைக்கேட்டு பளார் என அவரது கன்னத்தில் அறையும் பிரகாஷ்ராஜ், தமிழில் பேசு என்பார். இந்த காட்சி தற்போது ஒருசாரர் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.


அதையடுத்து பிரகாஷ்ராஜ் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஜெய்பீம் படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையை பார்க்காமல் அநியாயத்தை பார்த்து பரிதாபப்படாமல் ஹிந்தியில் பேசியவரை நான் அடித்த விஷயத்தைதான் பெருசு படுத்துகிறார்கள் .இவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது அவர்களின் வேற மாதிரியான நோக்கத்தைதான் வெளிப்படுத்துகிறது. அதோடு ஒரு திரைப்படம் என்று வருகிறபோது சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் கேள்வி கேட்காமல் இருக்க ஹிந்தியில் பேசினால் இப்படித்தான் நடந்து கொள்வார்.


இந்த ஜெய்பீம் படம் 1990களின் பின்னணியாகக் கொண்டது. அந்த கேரக்டருக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு இருந்தால் இப்படித்தான் செய்திருப்பார். முறையான கல்வி பெறாத பழங்குடியினர் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம். அதனால் போதுமான கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஹிந்தியில் பேசிய அவரை தமிழில் பேசு என்று அந்த போலீஸ் அதிகாரி அடிப்பார். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது இல்லாமல் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை தவறான நோக்கத்தில் யாரும் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
கமல்ஹாசன் பிறந்தநாள்; முதல்வர் வாழ்த்துகமல்ஹாசன் பிறந்தநாள்; முதல்வர் ... அதர்வா பட செட்டுக்குள் மழை நீர் புகுந்தது! அதர்வா பட செட்டுக்குள் மழை நீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 நவ, 2021 - 09:15 Report Abuse
Sridhar முதலில் அடிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது? முந்தய அரசு போலீஸ் அராஜகம் என்று சொல்லிக்கொண்டு நியாயம் பேச வரும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே வரம்பு மீறி ஒரு மனிதனின் சுயகௌரவதை குலைக்கும் வகையில் அடிக்கலாமா? ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பியது குற்றம் என்றால், அடிப்பதும் மிகப்பெரிய குற்றம் தானே? அரைவேக்காடுகள் எதோ பெரிய அறிவு ஜீவிபோல் பேசியதாக நினைத்துக்கொள்கின்றன.
Rate this:
Eswaran Eswaran - Palani,இந்தியா
12 நவ, 2021 - 09:11 Report Abuse
Eswaran Eswaran நேர்மையான ஆட்களாக இருந்தால் இந்த வசனத்தை ஹிந்தியில் சொல்லியிருக்க வேண்டும்.அங்கெ மட்டும் அந்த வசனம் "உண்மையைச் சொல்லு" என்று ஏன் மாறியதுப் பிரகாஷ் ராசு? அப்புறம் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுத்த படத்தில் "அந்தோணி சாமி" என்ற வில்லன் போலீசு குருமூர்த்தி என்று டுப்பான பெரு ஏன் வந்தது? அந்தோணி சாமை ஹிந்துவாக தைமாதம் திரும்பிவிட்டாரா? என்னங்கடா ஒரே பித்தலாட்டமா இருக்கு? இந்தப் படத்துக்கு நிதி உதவி யாருங்க பிரகாசு?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
10 நவ, 2021 - 03:47 Report Abuse
meenakshisundaram காசு கொடுத்தாங்க டைரக்டர் சொன்னாரு நான் நடிச்சேன் -அப்படீன்னு சொல்லிட்டு போவியா .ஏதோ சரி ங்கிற மாதிரி நியாயப்படுத்துறே எத்தனையோ ஹிந்திக்காரங்க தமிழை பேசுவது உனக்கு தெரியுமா ?அதுலேயும் கர்நாடகாவில் இருந்துக்கிட்டு இப்படி பேசுறே ?அங்கே ஆட்டோ ஓட்டுனர் கூட குறைந்தது நான்கு மொழிகள் பேசுறாங்க -தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆங்கிலம் கன்னடம் மற்றும் மலையாளம் இங்கே தமிழன்தான் கோணாற்று தவளையாக இருக்கிறான்
Rate this:
Anand Raghavan - chennai,இந்தியா
09 நவ, 2021 - 08:01 Report Abuse
Anand Raghavan இது போல உண்மையாக அன்று நடந்ததாக எனக்கு நம்பிக்கை இல்லை வாய்ப்பும் இல்லை இந்தமாதிரி வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது இதுஒரு மசாலா அவ்வளவுதான் அந்த அடகு கடைக்காரர் அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார் பிரகாஷ் ராஜின் ரோலை பூஸ்ட் செய்யவும் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை பயன்படுத்தி எக்ஸ் பிலாய்ட் செய்யவும் இப்படி எடுக்கப்பட்டுள்ளது வடநாட்டிலிருந்து இங்கு வியாபாரம் செய்பவர்களை நன்கு அறிந்தவர்கள் இதை நம்பவும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள் பாவம் இந்தி இந்த வழக்கில் உண்மையில் இருளர்களுக்காக வாதாடியவர் சூரியா போல கொதித்து ஓவர் ரியாக்ட் பண்ணியிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை . தற்போது ஜாதி அடக்குமுறை மிகவும் குறைந்துள்ள நிலையில் பணம் பண்ணும் நோக்கத்தில் படங்கள் எடுத்து மக்களின் மனங்களில் கோப மற்றும் காழ்ப்பு உணர்ச்சிகளை தூண்டுவது தவறு. இந்தப்படத்தில் நடித்துள்ள சூரியா மற்றும் பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்காக காட்சிகள் எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.
Rate this:
spr - chennai,இந்தியா
09 நவ, 2021 - 06:14 Report Abuse
spr படமே காவற்துறையின் அராஜகத்தை சுட்டிக் காட்டுவதுதானே அதன் தொடர்ச்சி தானே இதுவும். அவர் பேசுவது, காவற்துறை அதிகாரியிடம் ( பிரகாஷ் ராஜ்) பொதுமக்களிடமல்ல அப்படியே இருந்தாலும் தமிழில் பேசு என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் அதைவிட்டு அடிப்பது பொதுவாக நடக்கும் ஒரு செயலே. இது போல விசாரணை செய்யும் பொழுது சினம் கொள்வதுவும் , தேவையின்றி அடிப்பதுவும் விசாரிக்கப்படுபவர் மனதில் ஒரு அச்சத்தை உண்டாக்கி அவர் அந்த மனநிலையில் ஏதேனும் உளறுவார் அதனை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற காவற்துறையின் பொதுவான அணுகுமுறை. இப்படிச் சொல்லியிருந்தால் இவரைப் பாராட்டியிருக்கலாம் அதை விடுத்து தேவையில்லாமல் ஏதோ உளறுகிறார்
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in