புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சென்னை:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று இரவு வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிக்கு, மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. விருது பெற்ற பின், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்த ரஜினி, சென்னை திரும்பினார்.பின், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். இதையடுத்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், அங்கு சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர்
பாலகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்தார்.