புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2019ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான பர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள விஷ்ணு விஷால், இது தவறான செய்தி. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் எப்போதுமே சொல்வது, இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறோம். திரையரங்கில் படம் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வு இருக்கும் என்று கூறியுள்ளார்.