பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரெட்டி, மூன்றாம் உலக தீவில் பிச்சைக்காரர்களை விட மோசமான நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்.
ஜீ தமிழில் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவரில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகின்றனர். சர்வைவர் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி வெளியில் வரும் அனைவருமே ஏதோ ஒரு சோக கீதத்தை பாடி வருகின்றனர். அந்த வகையில் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன காயத்ரி ரெட்டி, நீண்ட நாட்களாக மூன்றாம் உலக தீவில் இருந்தார். அதிக நாட்கள் மூன்றாம் உலகத் தீவில் இருந்த ஒரே நபர் காயத்ரி தான்.
இந்நிலையில் அங்கு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து தற்போது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், 'சர்வைவர் நிகழ்ச்சியில் மூன்றாம் உலகத் தீவில் நான் சில கஷ்டங்களை அனுபவித்தாலும் அந்த இடத்தை, உப்பில்லாத உணவை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். மற்ற போட்டியாளர்களுடன் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கஷ்டங்கள் தெரிந்திருக்காது. மூன்றாம் உலகத் தீவில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அங்கு உணவில்லாது தவிப்பது மிகவும் மோசமான விஷயம். அது பிச்சை எடுப்பதை விட கஷ்டமாக இருந்தது. ஒருமுறை நான் இன்னொருவர் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவை கூட சாப்பிட்டேன்' என்ற அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார்.