எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டரில் பெரிய அளவிலான ராகவேந்திர சுவாமியின் சிலை முன்பு தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதோடு, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ராகவேந்திரா சுவாமிகளின் சிலையை நிறுவ வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. அது தற்போது நனவாகியுள்ளது. மிக விரைவில் அந்த சிலை பொதுக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை 15 அடி நீளத்தில் மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா சுவாமி சிலை முன்பு லாரன்ஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலானது.