இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டரில் பெரிய அளவிலான ராகவேந்திர சுவாமியின் சிலை முன்பு தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதோடு, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ராகவேந்திரா சுவாமிகளின் சிலையை நிறுவ வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. அது தற்போது நனவாகியுள்ளது. மிக விரைவில் அந்த சிலை பொதுக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை 15 அடி நீளத்தில் மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா சுவாமி சிலை முன்பு லாரன்ஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலானது.