மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகாவின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திருமணத்தில் வைஷாலியின் கழுத்தில் தாலி ஏறும் சமயத்தில் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சி நடிகையான வைஷாலி தனிகா, சத்யதேவ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் அண்மையில் தாங்கள் காதலித்து வருவதை ரசிகர்களுக்கு தெரிவித்து விரைவில் திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லி இருந்தனர். இருவரின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து அவரது திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தின் போது சத்யதேவ் வைஷாலியின் கழுத்தில் தாலியை கட்ட, அப்போது உணர்ச்சிபெருக்கில் வைஷாலி தனிகா கண் கலங்கி ஆனந்த கண்ணீர் சிந்தினார். இதன் வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் வைஷாலிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.