விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
அரசியலில் இருந்து ரஜினி விலகிக் கொண்ட நிலையில் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகரித்திருப்பதாக வெளிவரும் தகவல்களை உறுதி செய்வது போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அரசியலில் இறங்கினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடலாம் என்று விஜய் பச்சைக்கொடி காட்டினார்.
இதனால் இந்த தேர்ததலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் உற்சாகம் அடைந்துள்ளனார். நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. மக்களுக்காக நன்றாக உழைத்து, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று விஜய் பேசியதாக தெரிகிறது.