மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை சந்தித்த பிறகு இது தொடர்பாக உதய நிதி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ரசூல் இருவரும் என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். என்று எழுதியுள்ளார்.