குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு |
2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று டில்லியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஒரே நாளில் ஒரே மேடையில் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தடுத்து விருது பெற்றுக் கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
2006ம் ஆண்டு தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'புதுப்பேட்டை' படத்தில் கூட்டத்தில் ஒருவராக அடியாள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அதன்பின் படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாகி இன்று தேசிய விருது பெறும் அளவிற்கு விஜய் சேதுபதி வளர்ந்துள்ளார்.
'புதுப்பேட்டை' படத்தில் தனுஷின் பின்னாடி விஜய் சேதுபதி நிற்கும் புகைப்படத்தையும், நேற்று இருவரும் விருது பெற்ற புகைப்படத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து ரசிகர்கள் சில பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
முயற்சி என்ற ஒன்று இருந்தால் கூட்டத்தில் ஒருவராக இருப்பவர் விருத பெறும் ஒருவராக இருக்கும் அளவிற்கு உயர முடியும் என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு சாட்சி.