பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயற்கை விவசாயம், விவசாயிகளின் பிரச்சினை, ஆடு மாடு வளர்ப்பு பற்றிய கதை களத்தை கொண்ட திரைப்படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளது. அந்த மாதிரியான கதைகளத்தை கொண்ட சின்னத்திரை தொடர்களும் உருவாகிறது.
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் முத்தழகு. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெயர்தான் முத்தழகு. கிராமத்து தெனாவெட்டான பெண். அந்த பெயரையே சீரியலுக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
முத்தழகு விவசாயத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் தேர்வு செய்து வாழ்கிறார்கள். அவளது வாழ்க்கையின் ஊடாக விவசாயத்தின் பெருமை, மனிதர்களுக்கும் ஆடு, மாடுகளுக்கும் இருக்கிற பிணைப்பு குறித்து மண்வாசனையுடன் தயாராகி வருகிறது. இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சீரியல் பற்றிய முதல் கட்ட அறிவிப்பை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.




