பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகனும், அருண் விஜயும் இணைந்துள்ள படம் பார்டர். ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டக்கு தயாராகி விட்டது. நவம்பர் 19ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திருப்திகரமாக முடிந்தமைக்காக அருண் விஜய் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு ஐ பேட் பரிசளித்துள்ளார்.
படம் குறித்து அருண் விஜய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது படத்தில் உங்கள் அற்புதமான பணிக்கான ஒரு அன்பின் அடையாளம். இந்த அற்புதமான கதையை என்னிடம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றிகள். இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. பார்டர் என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார்.