25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சென்னை : நடிகர் சிம்புவின் வளர்ச்சியை தடுக்க சதி செய்வதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாய் உஷா, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் மைக்கேல் ராயப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், சினிமா படங்களை தயாரித்து வருகிறார். சிம்புவின் நடிப்பில், அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது இல்லை. கால்ஷீட் கொடுத்தபடி சிம்பு நடித்துக் கொடுக்கவில்லை. இதனால், காட்சிகள் சரியாக அமையவில்லை; படமும் ஓடவில்லை. எனக்கும், பட வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என, மைக்கேல் ராயப்பன் குற்றஞ்சாட்டி வந்தார்.
![]() |
சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்னை குறித்து, பல கட்ட பேச்சுக்கு பின், சிம்புவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. எனினும், மைக்கேல் ராயப்பனுடனான பிரச்னை தீர்ந்தபாடில்லை. இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணம் உள்ளனர்.
![]() |