விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஆச்சார்யா படத்தை முடித்து விட்டு தற்போது மலையாள லூசிபர் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார். படப்பிடிப்பின்போது சிரஞ்சீவிக்கு அடிக்கடி வலது கை உணர்விழந்தது. இதனால் அவர் சண்டை காட்சிகளில் நடிக்க சிரமப்பட்டார்.
இதை தொடர்ந்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கார்பண்டல்ஸ் சிண்ட்ரம் எனப்படும் அடிக்கடி கைகள் மரத்துப்போகும் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சிரஞ்சீவி இதுகுறித்து கூறியிருப்பதாவது: எனது வலது கை அடிக்கடி உணர்வற்ற போவதால் சரியாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதற்காக கையின் நடு நரம்பில் ஆபரேஷன் செய்து கொண்டேன். இந்த ஆபரேஷன் 45 நிமிடங்கள் நடந்தது. இது பூரண குணமாக 15 நாட்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து காட்பாதர் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.