ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஆச்சார்யா படத்தை முடித்து விட்டு தற்போது மலையாள லூசிபர் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார். படப்பிடிப்பின்போது சிரஞ்சீவிக்கு அடிக்கடி வலது கை உணர்விழந்தது. இதனால் அவர் சண்டை காட்சிகளில் நடிக்க சிரமப்பட்டார்.
இதை தொடர்ந்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கார்பண்டல்ஸ் சிண்ட்ரம் எனப்படும் அடிக்கடி கைகள் மரத்துப்போகும் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சிரஞ்சீவி இதுகுறித்து கூறியிருப்பதாவது: எனது வலது கை அடிக்கடி உணர்வற்ற போவதால் சரியாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதற்காக கையின் நடு நரம்பில் ஆபரேஷன் செய்து கொண்டேன். இந்த ஆபரேஷன் 45 நிமிடங்கள் நடந்தது. இது பூரண குணமாக 15 நாட்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து காட்பாதர் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.