தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் | 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 |

விஜய் டிவி சூப்பர் சிங்கரான சவுந்தர்யா பாலா நந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். வெள்ளித்திரையில் 'கபாலி', 'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், ஒரு நடிகை என்ற அந்தஸ்தை சவுந்தர்யாவுக்கு பெற்று தந்தது சின்னத்திரை தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' தொடரில் சவுந்தர்யா ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் சவுந்தர்யா மணமகளாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பின் சவுந்தர்யா சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.