டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா |

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தீபாவளிக்கும், தீபாவளிக்கு பிறகும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வசூல் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.