ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து விட்டார். இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணம் இதுதான் என்ற பல தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. அதில் முக்கியமானது சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இருந்த நெருக்கமான தொடர்பும் என்றும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமந்தா தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று பொருள். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும்?
எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சமந்தாவையும் என்னையும் பற்றி யாரும் அப்படி பேசவேண்டாம் என்று நாக சைதன்யா வாய்திறந்து பேசியிருக்கலாம். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இப்போது ரசிகர் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறார்.