சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ஓரளவு நிலைமை சரியானதால், கடந்த அக்டோபர் மாதமே தியேட்டர்கள் பாதுகாப்பு விதிகளின்படி செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் வரும் ஜன-5ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிடலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
திரைப்பட, மற்றும் திரையரங்கங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து பாதிக்கப்பட்ட கூடாது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் குஷியாகியுள்ளன.