'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ஓரளவு நிலைமை சரியானதால், கடந்த அக்டோபர் மாதமே தியேட்டர்கள் பாதுகாப்பு விதிகளின்படி செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் வரும் ஜன-5ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிடலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
திரைப்பட, மற்றும் திரையரங்கங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து பாதிக்கப்பட்ட கூடாது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் குஷியாகியுள்ளன.