மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ஓரளவு நிலைமை சரியானதால், கடந்த அக்டோபர் மாதமே தியேட்டர்கள் பாதுகாப்பு விதிகளின்படி செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் வரும் ஜன-5ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிடலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
திரைப்பட, மற்றும் திரையரங்கங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து பாதிக்கப்பட்ட கூடாது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் குஷியாகியுள்ளன.