நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ஓரளவு நிலைமை சரியானதால், கடந்த அக்டோபர் மாதமே தியேட்டர்கள் பாதுகாப்பு விதிகளின்படி செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் வரும் ஜன-5ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிடலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
திரைப்பட, மற்றும் திரையரங்கங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து பாதிக்கப்பட்ட கூடாது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் குஷியாகியுள்ளன.