‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
பாலக்காட்டு தமிழ் பொண்ணு வித்யாபாலன். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. வித்யா பாலன் சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆடிசன் வரைக்கும் வந்து நிராகரிக்கப்பட்டவர். மேலும் சில கசப்பான அனுபவங்களும் வித்யா பாலனுக்கு உண்டு. அதனால் தமிழ் படங்கள் என்றாலே அவருக்கு அலர்ஜியாக இருந்தது.
கமலுடன் தசாவதாரம், விஸ்வரூபம், ரஜினியுடன் கபாலி, காலா படங்களுக்கு பேசப்பட்டார். பெரும் தொகை சம்பளமாக கொடுக்க முன்வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டார். ஆனால் தற்போது தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது தாயாக அதாவது என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் அம்மாள் கேரக்டரில் நடிக்கிறார் வித்யா பாலன். இதில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளம் என்றபோதும் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தாலேயே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை நன்றாக உணர்ந்து நடிக்ககூடிய வித்யாபாலன், தற்போது பசுவதாரகம் அம்மாள் கேரக்டர் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து அவருடைய வீடியோக்களை பார்த்து தனது கேரக்டருக்கு பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்புக் கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பேசப்படுகிறது.