போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலக்காட்டு தமிழ் பொண்ணு வித்யாபாலன். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. வித்யா பாலன் சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆடிசன் வரைக்கும் வந்து நிராகரிக்கப்பட்டவர். மேலும் சில கசப்பான அனுபவங்களும் வித்யா பாலனுக்கு உண்டு. அதனால் தமிழ் படங்கள் என்றாலே அவருக்கு அலர்ஜியாக இருந்தது.
கமலுடன் தசாவதாரம், விஸ்வரூபம், ரஜினியுடன் கபாலி, காலா படங்களுக்கு பேசப்பட்டார். பெரும் தொகை சம்பளமாக கொடுக்க முன்வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டார். ஆனால் தற்போது தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது தாயாக அதாவது என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் அம்மாள் கேரக்டரில் நடிக்கிறார் வித்யா பாலன். இதில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளம் என்றபோதும் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தாலேயே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை நன்றாக உணர்ந்து நடிக்ககூடிய வித்யாபாலன், தற்போது பசுவதாரகம் அம்மாள் கேரக்டர் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து அவருடைய வீடியோக்களை பார்த்து தனது கேரக்டருக்கு பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்புக் கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பேசப்படுகிறது.